பாரதரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்


                பாரதரத்னா  எம்.ஜி.இராமச்சந்திரன்
இலங்கையிலுள்ள கண்டியில் 1917 ஆம் ஆண்டு சனவரித்  திங்கள் 
பதினேழாம் நாள் பிறந்தார். இவர்,
கோபாலமேனன் சத்யபாமா 
இணையருக்கு ஐந்தாவது மகனாவார். இவரது இரண்டாவது
அகவையில் தந்தை காலமானார். வறுமையில்  வாடிய இராமச்சந்திரனுடைய குடும்பம் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் 
நகருக்குக்  குடிபெயர்ந்து.  அன்னை
சத்யபாமா, அங்குள்ள ஆனையடிப்
பள்ளியில்  தம்மக்கள் சக்கரபாணியையும் இராமச்சந்திரனையும் சேர்த்தார் 
எனினும், வறுமையினால  இவரும்
பள்ளிப்படிப்பைத் தொடரவில்லை.


     இந்நிலையில், எதிர்பாராதவிதமாக  இருவருக்கும்
நாடகத்துறையில் நடிக்கும்  வாய்ப்புக் கிட்டியது.  தமது இளமைப்பருவத்தில், மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த இராமச்சந்திரன்,  திரைப்படத்துறையில் ஈடுபட்ச் சிறுசிறு பாத்திரங்களில் நடித்துக்
கதாநாயகனாக  உயர்ந்தார். அவரது
உயர்நிலைக்குக் கொண்டுசென்றன.
  
     
       அறிஞர் அண்ணாவின்  பேச்சாற்றல், பழகும் பண்பு,  உண்மை, நேர்மை,  கடமை, கண்ணியம், கட்டுப்பாடு முதலியவற்றால்  இராச்சந்திரன் 
கவரப்பட்டார். 
       இராமச்சந்திரன்,நடிப்புக் 
கலையையும் அரசியலையும் தமது
இருகண்களாகக்  கருதினார்.  தாம்
நடித்த திரைப்படங்கள் வாயிலாக, 
நல்ல பல கருத்துகள் மக்களைச்  சென்றடைப் பெருமுயற்சி எடுத்தார்.
இத்தகைய செயல்பாடுகள் படிப்பறிவற்ற பாமர மக்கள், எளியோர்கள்,  உழவர்கள்,  
தொழிலாளர்கள்  முதலியோரிடையே  மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. கடினஉழைப்பே ஒரு நாட்டுக்கு  வளர்ச்சியை கவனிக்கும் என்று
இராமச்சந்திரன் நம்பினார் 


       மக்கள் அவரை,    புரட்சி  நடிகர் 
என்றும்,  மக்கள் திலகம்  என்றும் 
போற்றினர். அறிஞர் அண்ணாவின் 
நெஞ்சம் கவர்ந்தவராக எம். ஜி. ஆர். விளங்கியதனால்,  அவரை அறிஞர் அண்ணா, இதயக்கனி  என்று 
போற்றினார் 


    இராமச்சந்திரன் நடிப்புத் துறையில் மட்டுமன்றி அரசியலிலும்
ஈடுபட்டார். இவர் 1963 ஆம் ஆண்டு 
சென்னை  மாநிலச் சட்டமன்ற  மேலவை உறுப்பினரானார். 1967ஆம்
ஆண்டு நடைபெற்ற பொதுதேர்தலின்போது பரங்கிமலைத்தொகுதியில் 
போட்டியிட்டு  வெற்றிபெற்றார்
 

1972ஆம் ஆண்டில், தாமிருந்த 
இயக்கத்திலிருந்து விலகிப் புதிய
கட்சியைத் தொடங்கினார். அவர்
1977ஆம் ஆண்டு நடைபெற்ற 
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில்
பெருவெற்றி பெற்று முதல்வராகப்
பதவி ஏற்றார். பதினோராண்டுகள் 
தமிழ்நாட்டின் முதல்வராகப் பணியாற்றினார். சென்னைப் 
பழ்கலைக்கழகம் அவரது பணிகளைப் பாராட்டி, டாக்டர்  
பட்டம் வழங்கியது.  இந்திய அரசு, 
சிறந்த நடிகர்க்கான பாரத் பட்டத்தை
வழங்கி,  அவருக்குச் சிறப்புச் 
செய்தது. 


எம். ஜி. இராமச்சந்திரன்  வறுமை, பசிக்கொடுமை ஆகிய இரண்டனையும் இளமையிலேயே. உணர்ந்தார். அதனால்  அவர்,  பெருந்தலைவர்  காமராசர்  காலத்தில்  அறிமுகப்படுத்திய மதிய
உணவுத் திட்டத்தைத் தொடக்கப்பள்ளியில்  படிக்கும்  குழந்தைகள்  அனைவருக்கும்  பயனளிக்கும்  வகையில்  சத்துணவு  வழங்கும்  திட்டமாகச்  செயல்படுத்தினார் 


புரட்சி தலைவர்  என்று  மக்களால்  
போற்றப்பட்ட  எம். ஜி.  இராமச்சந்திரன்  24.12.1987 அன்று  இயற்கை எய்தினார். எம். ஜி.  இராமச்சந்திரன்  அவர்களது  உடல்  
சென்னை  மெரினா  கடற்கரையில், 
அண்ணா  நினைவிடத்திற்கருகே  
நல்லடக்கம்  செய்யப்பட்டு, 
அவருாக்கான  நினைவகம்  எழிலுற
அமைக்கப்பட்டது.  

   அவர்தம்  பணியைப்  பாராட்டி  
இந்தியாவின்  உயரிய  விருதான  
பாரதரத்னா விருது.   
(இந்திய மாமணி) 1988ஆம்  ஆண்டு
அவருடைய  மறைவுக்குப்  பின் 
குடியரசுத்  தலைவரால்  வழ்ங்கப்பட்டது
    

       “வாழ்ந்தவர்  கோடி
         மறைந்தவர்  கோடி 
         மக்கள் மனதில்  நிற்பவர்  யார்? ”

  என்னும்  அவர்  நடித்த   திரைப்படப்
பாடலுக்கு ,  அவரே   சிறந்த  
எடுத்துக்காட்டாகத்  திகழ்கிறார் 
           




    




Previous Post Next Post